fbpx
Homeபிற செய்திகள்கரூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி மாணவர்கள் ஆர்வமுடன்...

கரூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

12 ஆம் வகுப்பு முடித்த மாணவ – மாணவியர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலமாக கல்லூரி கனவுகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் கலை அறிவியல் கல்லூ ரியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த சுமார் 1600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கல்லூரி கனவுகள் நிகழ்ச்சியின் மூலமாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பது, எந்த கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, பொறியியல் மற்றும் கலை
அறிவியல் பிரிவுகளை எடுத்து படிப்ப தன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அரசு கல்லூ ரிகளிலும், தனியார் கல் லூரிகளிலும் மாணவ – மாணவிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், இந் நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிகழ்ச் சியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வியில் நிபுணர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி, மாணவர்க ளின் சந்தேகங்களை போக்கினர்.

படிக்க வேண்டும்

spot_img