கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (SVPISTM), பாரம்பரிய உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழா காலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் அறுவடைத் திருவிழாவுடன் தொடர்புடைய வழக்கமான சடங்குகளைப் பின்பற்றி ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் இந்த நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, அந்த நிகழ்வுக்கு உற்சாகத்தை சேர்த்தனர்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஃபேஷன்ஷோ அமைந்தது.

இதில் மாணவர்கள் பாரம்பரிய மற்றும் இன உடைகளை அணிந்து, தங்களின் படைப்பாற்றல், ஜவுளிக் கலை நயம் மற்றும் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வேடிக்கையான விளையாட்டுகள், உற்சாகமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசையும் இடம் பெற்றன.

அதைத் தொடர்ந்து, கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



