fbpx
Homeபிற செய்திகள்சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம்

சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம்

கோவை சரவணம் பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ, மாணவியர் பெற்றோருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பள்ளியின் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின் றனர். இது குறித்து மாண வர்களும் அவர்களின் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித் தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் சரவ ணம்பட்டி பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பள்ளி வளாகத்தில் கழிவறையை சுத்தம் செய்து பயன்படுத்தும் வகையில் வைக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத் திய போலீசார் , உரிய அதிகாரிகளின் கவனத்திக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img