fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி கிளப் டவுன்டவுன் சார்பில் கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் விழா

ரோட்டரி கிளப் டவுன்டவுன் சார்பில் கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் விழா

ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-க்கு உட்பட்ட கோவை டவுன்டவுன் ரோட்டரி சங்கம், சுயநம்பிக்கை மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தனது முக்கிய மனிதாபிமானத் திட்டமான செயற்கை கால்கள் வழங்கும் ‘ஸ்டாண்ட் அண்ட் வாக் 2025’ திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை நடத்தியது.

திட்டத் தலைவர் மற்றும் ரோட்டரி மாவட்ட உறுப்பினர் தலைவர் ரோட்டேரியன் ஏ.காட்வின் மரியா விசுவாசம் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தத் திட்டத்தின் மூலம், இதுவரை 516-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டின் திட்டத்தின் கீழ், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. மரபணு மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் கொண்ட குழந்தைகள், 8 முதல் 14 வயதுக்குட்பட்ட ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள், மேலும் நடமாட உதவி தேவைப்படும் அனைத்து வயதினரும் இதில் பயனாளிகளாக உள்ளனர்.

ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-ன் மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயற்கை கால்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இலங்கை, கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய மாற்றுத்திறனாளி த்ரோபால் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்திய ஆண்கள் அணிக்கும் பாராட்டு அளிக்கப்பட்டது.

இந்த இரு அணிகளுக்கும் கோவை டவுன்டவுன் ரோட்டரி சங்கமே பிரதான ஆதரவாளராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய தேசிய அளவிலான ஐபிசிஎல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளும் கௌரவிக்கப்பட்டன.

ரோட்டேரியன் ஏ. காட்வின் மரியா விசுவாசத்தின் முயற்சியுடன், கோவை டவுன்டவுன் ரோட்டரி சங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் ரோட்டரி டவுன்டவுன் மும்பை அணி சிறப்பு அங்கீகாரம் பெற்றது. இந்நிகழ்வின் போது மாவட்ட ஆளுநரால் ஐபிசிஎல் இதழும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இயக்குநர் ரோட்டேரியன் எம்.டி. கே.கே.சுக், உதவி ஆளுநர் ரோட்டேரியன் வி.ராஜா மகேந்திரன், குழுப் பிரதிநிதி ரோட்டேரியன்
எம். பிரேம்குமார், சங்கத் தலைவர் ரோட்டேரியன் சி.ஆர்.வி. ஸ்ரீநாத், செயலாளர் ரோட்டேரியன் எஸ். விக்ரம் குமார், பொருளாளர் ரோட்டேரியன் விக்னேஷ் மைல்சாமி உள்ளிட்ட பல ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img