மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அமலில் உள்ளது. இதனால் மீனவர்கள் சிறிய வகை படகுகளைக் கொண்டு கரையோர பகுதியில் மீன்களைப் பிடித்து வருகின்றனர். கடலூர் முத்து நகர் மீனவர்கள், நேற்று தூண்டில் மூலம் மீன்களைப்பிடித்துக் கொண்டிருந்தபோது 42 கிலோ எடை உள்ள அரிய வகை மயில் மீன்,சிக்கியது தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் அரிய வகை மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



