சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இதில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் ஐந்து ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடு 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு பதப்படுத்துதல் ஆலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப் பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் கூறு கையில், தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்த உள்ள தொழில் முதலீடுகள் மூலமாக, மேலும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமையும்.
அதோடு தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.