Homeபிற செய்திகள்ஐஏஎஸ் தேர்வில் சாதித்த ஏழை கிராமத்துப் பெண்!

ஐஏஎஸ் தேர்வில் சாதித்த ஏழை கிராமத்துப் பெண்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இன்பா யுபிஎஸ்சி தேர்வில் (ஐஏஎஸ்) வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது தந்தை பேருந்து நடத்துனராக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் பீடி சுற்றும் தொழிலாளியாக இருக்கிறார். மிக சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த இன்பா, செங்கோட்டையில் இருந்தே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வந்ததாகவும் தனது படிப்பிற்கு செங்கோட்டை நூலகம் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

சிவில் சர்வீஸின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற உடன், தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் அவருக்கு முதன்மை தேர்வில் பங்கேற்க ரூ.25000 ஊக்கத்தொகை அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகே சென்னையில் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்தததையும் இன்பா நன்றியோடு நினைவுகூர்கிறார்.

தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வை கண்டு அஞ்சாமல், தொடர்ந்து முயற்சி எடுத்து படித்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு ஓர் முன்மாதிரியாக திகழும் இன்பாவுக்கு செங்கோட்டை நூலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் அவரை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏழை கிராமப்புற மாணவர்களும் குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இன்பா ஓர் எடுத்துக்காட்டு; வழிகாட்டி.

அவருக்கு நமது வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img