fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்த போலீசார்

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்த போலீசார்

கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 500 மரக் கன்றுகளை நடும் மரம் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ் ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுவதை துவங்கி வைத்தனர்.

ஆயுதப்படை கவாத்து மைதானம் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கையில்மரக் கன்றுகள் ஏந்தி மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என காவல் ஆணையர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் அங்கு இருந்த காவலர்கள் காவல் ஆணையர் பால கிருஷ்ணன், துணைஆணை யர் சரவணன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோ ருடன் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஆயு தப்படை மைதானம் வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா ளர் பாலகிருஷ்ணன் பேசி யதாவது: ஆக்சிஜன் நமக்கு அதிக அளவு தேவை உள்ளது.

நாம் இங்கு அதிக அளவு மரங்கள் நட்டு வைத்தோம். மரம் நடுதல் மூலமாக காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள காவலர்கள் அவ ரது குடும்பத்தினர்கள் தேவையான ஆக்சிஜனை பெற முடியும் கார்பன் டையாக்சைடு குறைக்க ஒரு திட்டம் நாம் செய்து வருகிறோம். வாகனத்தில் வரும் புகைகள் அதில் வரும் கார்பன் டை ஆக்சைடு எப்படி குறைப்பது மின் சார சிக்கனம் செய்வது. வெப்பமயமாக்குதல் எப் படி சரி செய்வது பல கோணங்களில் நாம் பிரச்ச னைக்கு தீர்வு செய்து வரு கிறோம்.

நம்முடைய முதல் இலக்கு ஆக்சிஜன் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவ்வளவு ஆக்சிஜன் உரு வாக்குவது. தற்போது 1200 மரங்கள் காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ளது கடந்த வருடம் 1500 மரங்கள் நட்டு வைத்தோம் இங்கு மியாவாக்கி உருவாக்கி உள்ளோம். தற்போது அந்த மரங்கள் நன்றாக வளர்ந்து உள்ளது இதனைத் தவிர 15000 மரங்கள் நாம் நட வேண்டும் சோலார் நாம் வீடுகளில் போட வேண்டும் . 500 மரங்களை நாம் நடப்போகிறோம் அந்த மரங்களை அவ்வப் போது காவலர்கள் பார்த்து அதனை பராமரிக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img