கோவை பி.ஆர்.எஸ்.போலீஸ் பயிற்சி மைய வளாகத்தில் அரிமா சங்க இன்டர்நேஷனல் சார்பில் காவலர் மற்றும் அவர்களது குடும் பத்தினர் ஆகியோருக்கு இலவச முழு உடற்பரிசோதனை மருத்துவ முகாம் கவுன்சிலர் அழகு ஜெயபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
விழாவில் போலீஸ் துணை கமிஷனர்கள் மதிவாணன், சுகாசினி அரிமா கவர்னர் ஜான் பீட்டர். ஆயுத படை உதவி கமிஷனர் சேகர் மற்றும் சண்முகநாதன் தினகரன் கவுன்சிலர் உதவியாளர்கள் சோமு, காமராஜ்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.