fbpx
Homeபிற செய்திகள்பழங்கள், உணவால் விஜயகாந்த் உருவத்தை வரைந்து இரங்கல்

பழங்கள், உணவால் விஜயகாந்த் உருவத்தை வரைந்து இரங்கல்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறை வால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் தர்பூசணி பழத்திலும், உணவிலும் விஜயகாந்த் உருவத்தை உரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர் காய்கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தர்பூசணி பழத்தில் விஜயகாந்த் உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதேபோல் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யுஎம்டி.ராஜா என்ற நகை வடிவமைப்பு கலைஞர் “பசியாறும் சோறில் விஜயகாந்த்” என்ற தலைப்பில் சாப்பாட்டில் மஞ்சள் பொடியை கொண்டு விஜயகாந்த் உருவத்தை வரைந்துள்ளார். விஜயகாந்த் இல்லத்திற்கு யார் சென்றாலும் அனைவருக்கும் அவர் உணவளிப்பவர் என்பதால் உணவில் மஞ்சள் பொடியை கொண்டு அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img