கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் சென்னைவாழ் முன்னாள் மாணவியருக்கான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
கல்லூரிக்கும் மாணவிகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பைப் பற்றிக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு, கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்குப் பலவிதங்களிலும் முன்னாள் மாணவிகள் உதவி வருவதைப் பற்றிக் கூறி மகிழ்ந்தார்.
தற்போது வெவ்வேறு பதவிகளில், பொறுப்புகளில் உள்ள மாணவிகள், தங்களுடைய மகிழ்ச்சிகரமான கல்லூரி வாழ்க்கையை நினைவு கூர்ந்தபோது மறுபடியும் கல்லூரி வாழ்க்கைக்கே திரும்பிச்சென்ற உணர்வுமயமான தருணமாக அமைந்தது.