fbpx
Homeபிற செய்திகள்சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிர்மலா மகளிர் கல்லூரி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிர்மலா மகளிர் கல்லூரி

சுங்கம் சந்திப்பில் (ரவுண்டானாவில்) கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அங்கத்தினர் – கோலாட்டம், மௌன நாடகம் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் என்ற கருப்பொருளின் அடிப் படையில், தமிழ்நாடு போக்குவரத்துக் காவல் காப்பாளர்கள், கோவை, நிர்வகிக்கும் நிர்மலா மகளிர் கல்லூரியின் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் அமைப்பு இந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

பயணிகள், பொதுமக் கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் கடை வியாபாரிகள் ஆகியோ ருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுங்கம் சந்திப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் அங்கத்தினர் கோலாட்டம் (நாட்டுப்புற நடனம்) மற்றும் மௌன நாடகம் மூலம் விழிப்புணர்வு அளித்தனர்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராகக் கோவை மாநகரப் போக் குவரத்துக் கூடுதல் காவல் துணை ஆணையர் சிற் றரசு கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், மக்கள் கவனமாக வண்டி ஓட் டவேண்டும், அதிக வேகத் தைத் தவிர்க்க வேண் டும். குடித்துவிட்டு வண்டி ஓட்டலாகாது. மீறினால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைத்தார்.
நிர்மலா மகளிர் கல்லூரியின் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் அமைப்பு அதிகாரி டாக்டர் ப.மகேஸ்வரி வழிகாட்டுதலின்படியும், கோவை மாநகரின் தமிழ் நாடு போக்குவரத்துக் காவல் முதன்மை காப் பாளர் ரங்க பிரபு உறுது ணையுடனும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் அதிகாரி டாக்டர் ப.மகேஸ்வரி இந்த நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளைச் சிறப்பாகச் செய்ததோடு சிறப்பு விருந்தினரை வரவேற்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல் லூரி செயலர் அருட் சகோதரி டாக்டர் குழந்தை தெரேஸ் , முதல்வர் அருட் சகோதரி டாக்டர் மேரி பபியோலா, தமிழ்நாடு போக்குவரத்துக் காவல் காப்பாளர்களான நித்யா, சாம் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசி ரியர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா, பஸ், வேன் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோர் நிகழ்ச்சியைப் பார்வை யிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் களான டாக்டர் ஏ.ஏஞ்சல் கிறிஸ்டினா, செல்வி லீத்தியாள், ஏ. ஷைனி மற் றும் ஆகியோரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img