தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மற்றும் கம்பத்தில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, புதிய அலு வலக கட்டிடங்களில் குத்து விளக்கேற்றி வைத்து பார் வையிட்டார்.
கம்பத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இப் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள், தரைதளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கான தனித்தனி அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாலமான கூட்ட அரங்கம், கணினி அறை, பயிற்சி அரங்கம், மின்தூக்கி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் நவீன வசதி களுடன் இக்கட்டிடம் கட் டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் சக்கரவர்த்தி (தேனி), பழனிமணி (கம்பம்), மாவட்ட ஊராட் சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர்கள் முருகன் (தேனி), தங்கராசு (கம்பம்), கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப் போலியன், உதவி இயக் குநர் (ஊராட்சிகள்) பழனி வேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மோனிகா (தேனி), கனி, மாணிக்கம் (கம்பம்) உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.