சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும்,11 பயனாளிகளுக்கு தலா ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் பாலுசாமி, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, ஜெகதலா பேரூராட்சி தலைவர் செல்வி பங்கஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.