fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் நகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல்

மேட்டுப்பாளையம் நகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல்

நகராட்சி குப்பைகளை முறையாக அப்புறபடுத்த வில்லை என கண்டித்து பேசிய போது அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகர பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண் டும் என அமளியில் ஈடுபட்டனர்.

நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது.

அதிமுக கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 17 வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் விஜயலட்சுமி அகியோர் மீது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது

இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்களும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சனை முடிவுக்கு வராததால் மன்ற கூட்டத்தில் வைக்கபட்ட 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு சென்றார்.

படிக்க வேண்டும்

spot_img