fbpx
Homeபிற செய்திகள்மஞ்சூர் - கெத்தை சாலையில் இரவில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை

மஞ்சூர் – கெத்தை சாலையில் இரவில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை பகுதியில் எண் ணற்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக யானை மான் கரடி சிறுத்தை புலி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன

இதில் யானைகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடக்கும் யானைகள் விலை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பில்லூரில் இருந்து மஞ்சூர் செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்போது கெத்தை அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையின் நடுவில் ஒற்றை காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து நின்றது.

நீண்ட நேரம் சாலையில் நின்ற காட்டு யானை பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.
இதனை அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img