இந்தியன்ஆயில் நிறுவனம், சென்னை சர்வதேச வட்டத்தில், இந்திய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில், ஓட்டப் பந்தய கார்களுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர் அளவில் ஓக்ட்டேன் கொண்ட ஓட்டப் பந்தய எரிபொருள் ஆன ஸ்டிரோம் X சேலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உடன்படிக்கை கையெழுத்து ஆனது .
நிகழ்ச்சியில், இந்தியன்ஆயில் இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) அலோக் சர்மா, மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் அஜித் தாமஸ், செயலர் பிரபா சங்கர், துணைத் தலைவர் விக்கி சந்தோக்கே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியன்ஆயில் இயக்குநர் (வர்த்தகம்) வி. சதீஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு STORM-X பிராண்டின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்து, பேசியதாவது: – எங்களுடைய வாடிக்கையாளர்களின் பல்வகை தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உயர் தரம் கொண்ட எரிபொருள்களையும் லூப்ரிகன்ட்களையும் வழங்குவதில் முன்னணி வகித்து வருகிறோம்.
பலவற்றில் நாங்கள்தான் முதன்முதல் என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் அறிமுகப்படுத்திய வையாவன – நாட்டின் முதல் ஓக்ட்டேன் எரிபொருள் -XP100, மிக குறைந்த உமிழ்வைத் தந்து எரிபொருள் செயல்திறனைத் தரும் எக்டிரா கீரீன் டீசல்.
மோட்டார் விளையாட்டுகளில் இந்தியன்ஆயில் நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பு உணரவை மீண்டும் பறை சாற்றும் வகையில் STORM-X அறிமுகம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.