கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘விருட்சம் 2025’ என்ற பெயரில் “என் கல்லூரி, என் வளர்ச்சி” என்ற கருப்பொருளில் 16வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில் விப்ரோ நிறுவனத்தின் தேசிய பணியமர்த்துதல் தலைவர் ராதிகா ரவி சிறப்பு விருந்தினாராக பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கல்லூரியின் முதல்வர் சரவணன் ஆண்டறிக்கையை வாசித்தார். அதில் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றது,
மாணவர்களின் கண்டுபிடிப்புகள், ஆசிரியர்களின் பன்னாட்டு அளவிலான ஆராய்ச்சி படைப்புகள் மற்றும் கல்லூரி தேசிய அளவிலான தர வரிசையில் இடம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார்.
விழாவில் கல்லூரியின் ‘ப்ரொகிரெஸ்ஸிவ் கேபிஆர்’ ஆவணத் தொகுப்பு வெளியிடப்பட்டது.