ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தனது பள்ளி தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது.
தாளாளர் ஆர்.எம்.தேவராஜா தலைமை தாங்கினார். முதல்வர் கே.மைதிலி வரவேற்றார்.
கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோவும், தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவரும், நீலகிரி அரசு மருத்து வமனையில் தற்போதைய உதவி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரதீப் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர்.
கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் எச்.வாசுதேவன், அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் ஆர்.குமாரசாமி, பி.சத்தியமூர்த்தி, கே.வி.ரவிசங்கர், பாராட்டுரை வழங்கினர்.



