fbpx
Homeபிற செய்திகள்சுகாதார துறை தேவைகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பேச்சு

சுகாதார துறை தேவைகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பேச்சு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட சுகாதாரப் பேரவை – (2023-24) கூட்டத்தை ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.

எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, நகராட்சி தலைவர்கள் குணசேகர், முனைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் தங்கவேல் பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரப்பேரவை என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் கட்டிடங்கள், உபகரணங் கள், மக்களின் தேவைகள் மற்றும் இதர தேவைகளை வட்டார அளவில் பொது மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் ஒரு குழு அமைத்து, தேவை யானவற்றை விவாதித்து, அதனை மாவட்ட அள வில் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட் சியருடன் ஆலோசனை செய்து அதனை மாவட்ட சுகாதாரப் பேரவையாக நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 315 கருத்துருவில் 18 கருத்துருக்கள் வட் டார அளவிலும், 101 கருத்துருக் கள் மாவட்ட அளவிலும் தீர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள 195 கருத்துருக்கள் மாநில சுகாதாரப் பேரவையில் வைத்து தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டது போல் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img