தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை வியாபார நிறுவனங்களில் ஒன்றான கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கோவையில் தனது கைவினை நகை கண்காட்சியை தொடங்கியது.
அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் ஜனவரி 22 முதல் 24 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, வரவிருக்கும் பண்டிகை மற்றும் திருமண காலத்தைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
அழகிய கைவினைத் திருவிழா மற்றும் மணமகள் விழா என்ற கருப்பொருளில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியில், மிக நுணுக்கமாக கைவினை செய்யப்பட்ட தங்கம், வைரம், ஜடாவ் மற்றும் போல்கி நகைகளின் நேர்த் தியான தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாரம்பரிய கலைத்திறனையும் சம கால நேர்த்தியையும் ஒருங் கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு நகையும், கலாஷாவின் உயர்ந்த கைவினைத்திறன் மற்றும் தரநிலைகளுக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
கண்காட்சியின் தொடக்க விழாவில் மிதுனா துரைராஜ் (பங்காளி – பழமுதிர் நிலையம்), வித்யாபிரபா (நிறுவனர் & பிரிட்ஜ்வுட்ஸ் பள்ளிகள் குழுமம்), ரிதி மால்யா எஸ் (நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் & டைட் அண்ட் ப்ளூம்), ராதிகா பரமேஷ் (தலைவர் & இன்னர் வீல் கிளப் ஆஃப் கோவை), பத்மா பிரியா (நிறுவனர் & 10X ஹெல்தி ஸ்கின்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக, கலாஷா ஃபைன் ஜுவல்ஸின் புதிதாக வடிவமைக்கப்பட்ட மணப்பெண் நகைத் தொகுப்பு, மயக்கும் கோயில் நகைகள், நவீன வைரம் பதித்த வடிவமைப்புகள் மற்றும் கண்கவர் திருமண நகைகள் இடம் பெற்றுள்ளன.
பாரம்பரிய அழகியலையும் அரச ஆடம்பரத்தையும் ஒருங்கிணைக்கும் இந்தத் தொகுப்பு, ஒவ்வொரு மணப்பெண் அலங்காரத் திற்கும் அவசியமான ஒன் றாக விளங்குகிறது.
நிகழ்ச்சியில் பேசிய கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் உரிமையாளர் ஷ்ரவன் குமார் கூடூர், அரச பாரம்பரியத்தின் கருணை மற்றும் செழுமையால் ஊக்கமளிக்கப்பட்டு, காலத்தால் அழியாத கம்பீர உணர்வைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு படைப்பும் கவனமாக வடி வமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கண்காட்சியை உரிமையாளர் ஷ்ரவன் குமார் கூடூர் சிறப்பாக தொகுத்து வழங்க, எஷிகா சந்தா வரவேற்றார்.



