கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67க்குட்பட்ட வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். உடன் மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.