fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் மேசைப்பந்து விளையாடிய கலெக்டர்

கடலூரில் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் மேசைப்பந்து விளையாடிய கலெக்டர்

கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி-மேசைப்பந்து விளையாட்டு பயிற்சிமையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம். நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்க ளுக்கு சீருடைகள் மற்றும் மேசைப்பந்து உபகரணங் களை வழங்கிய கலெக்டர், மாணவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் மேசைப்பந்து விளையாடினார்.

இதைய டுத்து கலெக்டர் கூறுகையில், கடலூர் மாவட்டத்திற்கு தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம்-ஸ்டார் அகாடமி சார்பில மாவட்ட’ விளையாட்டு மேசைப்பந்து பயிற்சி மையம் அமைத்து செயல் படுத்தவும். அதற்கான ஏற் பாடுகளை செய்யவும் அறி வுரை வழங்கப்பட்டது.

அதன்படி மேசைப் பந்து மையம் தொடங் கப்பட்டுள்ளது. இந்த மேசைப்பந்து அகாடமி னர்.பயிற்சி மையத்தில் சேர 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 30 வேர் என் 20 மாணவிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

பயிற்சியின் போது மாணவர்களுக்கு தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் மாதத்தில் 25 நாட்களுக்கு தொடர் பயிற்சியோடு, சிற்றுண்டிகளும் வழங்கப் படும்.இந்த மேசைப் பந்து பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவேஇந்தவாய்ப்பை மாணவ்-மாணவிகள் பயன்ப டுத்திக்கொண்டு திறமையாக பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் உள்பட பயிற்று நர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img