fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மை பல்கலை. 54வது நிறுவன நாள் கொண்டாட்டம்

வேளாண்மை பல்கலை. 54வது நிறுவன நாள் கொண்டாட்டம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 54வது நிறுவன நாள் விழா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தலைவர் ஷாஜி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறந்த பெண் விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்கள், சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர், பல் கலைக் கழகத்தில் 25 வருடங்கள் பணியாற்றிய ஊழியர்கள் போன்ற பல பிரிவுகளில் பணியாற்றிய ஆசிரியரல்லாதோர் 120 பேருக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் பட்டது.

சிறந்த கல்லூரிக்கான விருது வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கோவைக்கு வழங்கப்பட்டதை முனைவர் வெங்கடேச பழனிச்சாமி முதன்மையர் வேளாண்மை பெற்றுக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img