fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் அலுவலகம் திறப்பு

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் அலுவலகம் திறப்பு

தூத்துக்குடியில் மாநில அ.தி.மு.க., வர்த்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லப் பாண்டியனின், மாநில வர்த்தக அணி அலுவலகம், தூத்துக்குடி டூவி புரம் 9வது தெருவில், எம்.எல்.ஏ. அலு வலகம் எதிரே, திறக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சிக்கு, மாநில வர்த்தக அணி செயலா செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சண் முகபுரம் சேகர தலைவர் இம்மானுவேல் வான்ஸ் ராக்புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

உதவி குருஜெபஸ்டின் தங்கபாண்டி, போல்டன் புரம் சேகர தலைவர் ஹாரீஸ், மில்லர்புரம் உதவி குரு ராபின் முன்னிலை வகித்தார் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்வர வேற்றார்.

அலுவலக திறப்பு விழாவில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் கிருஷ்ணராதா.எம். ஜி.ஆர், இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர்.ராஜகோபால், அவைத்தலைவர் வக்கீல் ஜெ.ஜெ.குமார், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், ராஜ்குமார், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட், ரூஸ்வெல்ட், சேசுராஜ், பாலன் மற்றும் வட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகி கள்கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img