சுமார் 97,000 சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 வரையிலான மதிப்புக் கூட்டு வரியை தள்ளுபடி செய்து, வணிகர்களுக்கான சமாதான் திட்டத்தை அறிவித்ததற்கு,
ஈரோடு மாவட்ட அனைத்து வணிகத் தொழில் சங்கங்களின் கூட்டமைப் புத் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை 80 சதவீத வரியை தள்ளுபடி செய்தும், 10 லட்சத்துக்கும் அதிகமான வரி பாக்கிகளுக்கும் விரைவில் தள்ளுபடி செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இத் திட்டத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த வணிகர்களுக்கு
இந்த அறிவிப்பு தீபாவளிப் பரிசாக இருக்கும். இது மாநிலத்தில் வர்த்தகத்தை புதுப்பிக்கும் என்றனர்.
பின்னர், எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள டி.வி.எஸ். தெருவை ஒருவழிப் போக்குவரத்திற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.