இந்தியாவில் மொபைல் போன் உபகரணங்களை தயாரிப்பதில் முன்னோடியாக இருக்கும் ஈஆர்டி குழுமம், அதன் 26-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2 நாள் பிரமாண்ட வணிக மாநாடு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை டெல்லியில் நடத்தியது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் நாடு முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட டீலர்கள் பங்கேற்றனர்.
ஈஆர்டி நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் பரத்வாஜ் கூறியதாவது:
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியைத் தொடர்ந்து, புதிய கண்டுபிடிப்புகளில் நாங்கள் சார்ஜர்களின்முன்னோடி நிறுவனமாக முயற்சித்தோம்.
நிறுவனத்தின் இடைவிடாத கவனம் காரணமாக எங்களால் வெற்றியை நோக்கி பாதையை வகுக்க முடிந்தது. எங்களின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் உற்பத்தி செய்யப்படுவதால், அவை உயர் தரத்தில் உள்ளன.
வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக் கமாகக் கொண்டுள்ளோம் என்றார். புதுமையான தயாரிப்புகளின் கண்காட்சியும், கின்னஸ் உலக சாதனையாளரும், வணிகப் பயிற்சி யாளருமான டாக்டர் உஜ்வல் பட்னியின் ‘ஈஆர்டி ஜோஷ்’ என்ற சிறப்பு அமர்வும், நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகளுக்கு அதிவேக வளர்ச்சி இலக்குகளை அடைய யோசனைகள் மற்றும் உத்திகளைக் கொண்டு உற்சாகப்படுத்தியது.
அதிநவீன வசதி
ஈஆர்டி குழுமத்தின் இயக்குநர் அர்ஜுன் பரத்வாஜ் கூறுகையில், ஈஆர்டி குழுமம் கடுமையான தரக் கட்டுப்பாட்டுத் தரங்களின் கீழ் தயாரிப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான அதிநவீன வசதியைக் கொண்டுள்ளது.
உற்பத்தி மற்றும் தயாரிப்பு தரத்தை கட்டுப்படுத்தும் வகையில் நன்கு நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் துல்லியமான சோதனை கருவிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
சந்தைக்கு விதிவிலக்கான வேகத்தில் புதுமையான ஆற்றல் தீர்வுகளை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றார்.



