fbpx
Homeபிற செய்திகள்‘எலான் மாஸ்க்’ புதிய பேட்டரி வாகன தொழிற்சாலை நிறுவனம் துவங்கப்பட்டது

‘எலான் மாஸ்க்’ புதிய பேட்டரி வாகன தொழிற்சாலை நிறுவனம் துவங்கப்பட்டது

கோவையில் புதிய பேட்டரி வாகன தொழிற்சாலை நிறுவனம் ‘எலான் மாஸ்க்’ (ELAWN MASK) துவங்கப்பட்டது.

நிறுவனத்தை பனாமா நாட்டின் இந்தியாவிற்கான தூதர் யாசியேல் புரில்லோ (YASIEL BURILLO), நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டு துவக்கி வைத்தார்.

இந்நிறுவனம் புதிய மூன்று சக்கர பேட்டரி வாகனங்களை உருவாக்க உள்ளது. குறிப்பாக பெண் தொழில் முனைவோருக்கு பயனளிக்கும் வகையில் இதன் தயாரிப்புகள் இருக்கும். இந்த வாகனங்கள் லித்தியம் பேட்டரியால் இயங்கக் கூடியவை. மிகவும் பாதுகாப்பானது எவ்வகையான மாசையும் இது ஏற்படுத்தாது.

பெண்கள் எளிதில் ஓட்டி செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனங்களை கொடி அசைத்து இயக்கி வைத்தார்.

எலான் மாஸ்க் நிறுவனர் தலைவர் பிருத்திவி கிருஷ்ணன் பேசும்போது, நிறுவனத்தின் தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தாது. பெண்கள் எளிதில் ஓட்டி செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

பெண் தொழில் முனைவோர் வாகனத்திலேயே வைத்து சிறு தொழில் கூடங்களை அமைத்து தேவையான இடத்திற்கு ஓட்டிச் சென்று தொழில் செய்யலாம். வியாபாரம் நடத்தலாம். அதற்கு உகந்த வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும் என்றார்.

பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் அனுஷா ரவி, பார்த்திபன், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img