fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல்லில் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆய்வு

நாமக்கல்லில் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உடையார்பாளையம், மங்களப்புரம் மற்றும் அயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத் துவர் ச.உமா ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து செய்தியாளர்க ளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மங் களபுரம் ஊராட்சியில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பிஎம் ஜன்மன் திட்டத்தின் கீழ், தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மொத்த பய னாளிகள் விபரம், வீடுகள் தற்போதைய கட்டுமான பணி நிலவரம், வீடுகளின் அமைப்பு, மொத்த அறைகள் எண்ணிக்கை, நீளம், அகலம் உள்ளிட் டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு பயனாளிக ளுடன் கலந்துரையாடி னார்.
தொடர்ந்து, மங்களபுரம் ஊராட்சி, உரம்பு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட் டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 3 பயனாளி களுக்கு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

மேலும், மங்களபுரத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் – ஆத்தூர் சாலை முதல் சிங்கிலியான் கோம்பை சாலை வழி யாக தண்டகவுண்டன் பாளையம் & மூலக்காடு – வெம்பாகவுண்டம்புதூர் வரை தார்சாலை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சாலையின் தரம், நீளம், அகலம், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், சாலை அமைக்க நிர் ணயிக்கப்பட்டுள்ள ஒப் பந்த காலம், மொத்த பணியாளர்கள் விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் ஊத்துப் புளிக்காடு வழியாக ஆண்டிக்குட்டை சாலை அமைக்கும் பணி களை பார்வையிட்டு, ஒப் பந்த காலத்திற்குள் பணிகளை தரமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, வெங்கடாசலபதி மகளிர் சுய உதவிக்குழுவினர் ரூ.10.00 லட்சம் வங்கி கடன் இணைப்பு மற்றும் ரூ.1.05 லட்சம் மதிப்பில் கடனுதவி பெற்று பிளாஸ் டிக் பொருட்களுக்கு மாற்றாக மா கல் மூலம் சிறுவர்களுக்கான விளையாட்டு சமையல் உபகரணங்கள், வீட்டிற் கான பனியாரக்கல், இட்லி பாத்திரம், மாசால் அறைக்கும் கல், பாத்திரம், நீர்குவளை, அகல் விளக்கு உள்ளிட்ட சமையல் உப கரணங்கள் தயாரித்து வருவதை பார்வையிட்டு, இப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் விபரம், பொருட்கள் தயாரிக்க ஆகும் காலம், அவற்றின் தரம், விலை விபரம், மொத்த விற்பனை விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, இப்பணியில் ஈடுபட்டுட் டுள்ள மொத்த பணியாளர் கள் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், இணைய வழியாக ஆன் லைன் மூலம் விற்பனை மேற்கொள்ளவது குறித்து மகளிர் சுய உதவிக் குழுவி னருடன் கலந்துரையாடினார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உடை யார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மூலிகை மற்றும் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட் டுள்ளதையும், சோலார் அமைக்கப்பட்டு சூரிய மின் சக்தி சேமிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.கஜேந்திரபூபதி, தி.சரவ ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img