தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று மாநில காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு கூறினார்.
கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆர்.ராஜாராம் வர வேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் டிஜிபி சி.சைலேந்திரபாபு பங்கேற்று, பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட 130 பவுன் தங்க நகைகள், 28 கைப்பேசிகள், வாகனங்களை உரியவர்களிடம் வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு கூறியதாவது:
தமிழகத்தில் பெரிய கலவரங்களோ, தொடர் குற் றங்களோ, கொள்ளைகளோ நடைபெறவில்லை. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஒரு லட்சத்து 32 ஆயிரம் காவலர்கள், அதிகாரிகளைக் கொண்ட தமிழ்நாடு காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் காவலர்களை நியமித்தோம். அதன் பிறகு மேலும் 3,200 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதேபோல 2022-ஆம் ஆண் டில் ஆயிரம் உதவி ஆய்வாளர் கள் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மேலும் 444 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக் குப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 600 உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் உதவி காவலர்களாக இளம் வயதுடையோர் பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. டிஎஸ்பி பொறுப்பிலும் இளம் வயதினர் பணியாற்றுவது கடந்த இரு ஆண்டுகளில்தான்.
சோதனைச்சாவடிகள்
மாநில எல்லைகளில் 26 சோத னைச்சாவடிகள்அமைக்கப்பட்டு அங்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பணியாற்றி வரு கின்றனர். மேலும், மற்ற துறை களுடன் இணைந்து 16 இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் அமைத்து செயல்படவும் திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் இணையவழி (சைபர் க்ரைம்) குற்றங்கள் நடை பெற்று வருகின்றன. வெளிநாட் டில் உள்ளவர்கள் கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு அப் பாவி மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எளிதாக திரு டிவிடுகின்றனர். இதேபோல பணத்தை இழந்தவர்கள் உடன டியாக 1939 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உங்கள் பணம் வேறு வங்கிக் கணக்குக்கு செல்வது தடுக்கப்படும்.
37 மாவட்டங்களிலும், 9 மாநகரக் காவல் ஆணையரகங் களிலும் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன. தேசிய,சர்வதேச அளவிலான குற்றங்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட போலீஸார் குற்ற வழக்குகளில் சிறப்பாகப்பணியாற்றி வருகின்றனர்.
முத்தாண்டிக்குப்பம் காவல் சரகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடை பெற்ற ஆதாயக் கொலை வழக்கில் தொடர்புடையோரை கைது செய்து நகைகளை கைப்பற் றியுள்ளனர். அதே காவல் சரகத் தில் ஒரு கொலை வழக்கில் 45 நாள்களில் தொடர்புடை யோரை கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.