கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட குமுதம் நகர் பகுதியில் (TURIP தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை நகராட்சி நிருவாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு அதன் தரத்தினை பரிசோதனை செய்து ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிசெல்வன், மாமன்ற உறுப்பினர் கோவை பாபு (எ) செல்வகுமார், மாநகரப் பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர்கள் இளங்கோவன், சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.