கோவை நிர்மலா கல்லூரியில் வரும் 14ம் தேதி 200 வகையான தினை உணவு கண்காட்சி & பசுமை சங்கமம் நிழ்ச்சி தொடங்க உள்ளது. இதுகுறித்து திரைஸ் எழுமின் அமைப்பு ஜெகத்கஸ்பர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை 2023ம் ஆண்டை அனைத்து உலக தினை உணவகங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கோவையில் கொங்கு மண்டல பசுமை சங்கமம் நிகழ்வுகள் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
நிர்மலா கல்லூரியில் நடைபெறும் விழாவை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து வருகிற 15-ந்தேதி வாழை விவசாயி களுக்கு பயிற்றுவிப்பு முகாம் நடக்கிறது. 16 -ம் தேதி காலை 6 மணிக்கு வ.உ.சி.பூங்கா அருகே தினை உணவு மாராத்தான் நிகழ்ச்சி நடைபெறும் மேற்கண்டவாறு அவர் கூறினார்.



