Homeபிற செய்திகள்கோவை என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் பேரவை தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா

கோவை என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் பேரவை தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா

கோவை என்.ஜி.பி. பள்ளியில் மாணவர் பேரவை தலைவர்கள் பொறுப் பேற்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வானது மாண வர்களுக்கு வழிகாட்டு வதற்கும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இந்த ஆண்டில், சபையில் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

என்.ஜி.பி. கல்விக் குழும நிறுவனரும், தலைவருமான டாக்டர். நல்லா.ஜி.பழனிசாமியின் ஆசியுடனும் வாழ்த்துகளுடனும் பள்ளி நாடாளு மன்றத்தில் மாணவர் தலைவர்கள் பொறுப் பேற்றுக் கொண்டனர். மேலும் முந்தைய ஆண்டில் திறமையான மாணவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவருமான வருண் சுந்தரமூர்த்தி, இயக்குனர் மதுரா வி.பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img