கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.
உடன் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



