Homeபிற செய்திகள்கோவை: தார் சாலை செப்பனிடும் பணியினை தொடங்கி வைத்த மேயர்

கோவை: தார் சாலை செப்பனிடும் பணியினை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட மோகன் நகர் பகுதியில் ரூ.34.20 இலட்சம் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதமடைந்த தார் சாலையை செப்பனிடும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பொன்னுசாமி, மணியன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img