fbpx
Homeபிற செய்திகள்புதிதாக கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகளை திறந்து வைத்த கோவை மேயர்

புதிதாக கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகளை திறந்து வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.99.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் இளங்கோவன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img