கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் உடையாம்பாளையம் அஞ்சுகம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பில்லூர்-III மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கவிதா, மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர்கள் ஜெயின்ராஜ், உத்தமன், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.