காளிங்கராயன் கால்வாய் வெட்டி 743 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து காலிங்கராயன்பாளையத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு , ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:- அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் 1045 குளங்களுக்கான பரிசோதனை முடிவடைந்து விட்டன. காலதாமத்திற்கு காரணம் தமிழக அரசு அல்ல.
நாமக்கலில் மதுபானக் கடைக்கு இந்தியில். அறிவிப்பு பலகையை துறை அதிகாரிகள் வைத்திருக்க மாட்டார்கள். இது தொடர்பாக விசாரிக்கின்றேன். இந்தியில் போர்டு வைக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தப்பகுதியில் வட மாநிலத்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என நினைத்து இந்தியில் அறிவிப்பு பலகையை அதி காரிகள் வைத்திருக்கலாம். தெரியாமல் வைத்திருப்பார்கள். தெரியாமல் சட்டத்தை மீறக்கூடாது.தெரிந்து செய்தாலும் , தெரியாமல் செய்தாலும் தண்டனை தான்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெற திமுகவுடன் அதிமுக இணைந்து போராட வேண்டும். அதிமுக காலத்தில் நீட் தேர்வுக்கு ஏன் போராட வில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.