கோவை மாநகர பி.ஆர்.எஸ் மைதானத்தில் காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி அமைப்பும் சேர்ந்து நடத்திய இவ்விழாவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இங்கு சுமார் 750 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் காவல்துறையினர் ஆர் வத்துடன் நடவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகின் தட்பவெப்ப நிலை வேகமாக மாறுபட்டி வரு வதை சீர்செய்ய அதிகளவில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டியது அவசியமாகும். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் ஆக்சிஜன் தேவை மிக அதிகமாக இருந்ததால் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அப்போது தான் உணர்ந்தார்கள்.
அதிகமான மரங்களை நட்டு பராமரிப்பதன் மூலம் ஆக்சிஜனின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆகவே அனைவரும் தங்களால் முடிந்த அளவு மரங்களை நட்டு சீரான தட்பவெப்ப நிலையை உருவாக்க வேண்டும்.
பல்வேறு வகையான 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இம்மரங்களை பராமரிக்க சிறுதுளி அமைப்பு உதவுகிறது. ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வளாகத்தில் இருக்கின்ற நிலையில், அதோடு சேர்த்து இம்மரங்களும் சுற்றுபுறச் சூழலை மேம்படுத்த உதவும்.
முதலமைச்சரின் ஆணையின் படி துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல்துறையுடன் சேர்க் கப்பட உள்ளது.
அக்காவல் நிலையங்களுக்கு கூடுதல் போலீசாரை கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்தை சீர் படுத்துவதற்கும் இந்த இணைப்பு உதவியாக இருக்கும். மாநகரப் பகுதிகளில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்ற சுமார் 500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகள் பிற இடங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஒருங் கிணைப்பாளர் சுஜினி பாலு, கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், மோட்டார் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எம்.பிரதாப் சிங், கோவை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.