fbpx
Homeபிற செய்திகள்மண்டல அளவிலான தடகளப் போட்டி: செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி சாம்பியன்

மண்டல அளவிலான தடகளப் போட்டி: செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி சாம்பியன்

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கோத்தகிரி செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட 69 பதக்கங்களை குவித்து, தொடர்ந்து 10-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றனர்.

கோவை ஈஷா ஹோம் பள்ளியில் தமிழகம், புதுச்சேரிக்கு உட்பட்ட சி.ஐ.எஸ்.சி.இ. எனும் கவுன்சில் பார் இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்ஸாமி னேஷன் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன.

65 பள்ளிகளைச் சேர்ந்த 1400 இளம் வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய், விளையாட்டுப் போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார்.
செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடந்தன. செயிண்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 30 தங்கம், 21 வெள்ளி, 18 வெண்கலம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பத்தாவது முறையாக தக்க வைத்துக் கொண்டனர்.

இந்த மகத்தான வெற்றியால், ஹைதரா பாத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க இவர்கள் தகுதி பெற்றனர்.

பள்ளி சேர்மன் டாக்டர் பி.பி.தனராஜன், செயற்குழு இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன் மாணவர்களை பாராட்டினர். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்திய பள்ளி முதல்வர் சரோ தனராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img