கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் மின் மற்றும் மின்னணுவியல் துறை இணைந்து loT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாடி தோட்டம் பயன்பாடுகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் நீர் உந்தி அமைப்பு செயல்படும் விதம் மற்றும் செயல் விளக்கம் குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் க.சேகர், மின் மற்றும் மின்ன ணுவியல் துறைத் தலைவர் முனைவர் அனந்தமூர்த்தி ஆகியோர் வர வேற்றனர்.
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.ஜெயா தொடக்கி வைத்து பேசும்போது, விவசாயத் துறையில் அறிவியல் சார்ந்த சமுதாய விழிப்புணர்வை விவசா யிகளிடம் கொண்டு சென்றதில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்ன ணுவியல் துறையின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.
சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சுற் றுச்சூழல் அறிவியல் துறை முனைவர் சாரா பர்வின் பானு கமலுதீன் பேசும்போது, சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை விவசாயம் மற்றும் மாடி தோட்டம் போன்ற இடங்களில் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை விளக்கினார்.
2-ம் நாள் நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 75 கிலோ வாட் சூரிய மின் நிலையம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் நீர் உந்தி அமைப்பு செயல்படும் விதம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி நிறுவனம் (கிளை) உதவி இயக்குநர் பி.கயல்விழி பேசுகையில், தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் குறித்து விளக்கினார்.
பங்கேற்ற அனைத்து பயனாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் முனைவர் பிரியா சதிஷ் பாபு, கல்லூரி தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் கே.கருணா கரன், கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.ஜெயா, டீன் முனைவர் பி.என்.மகுடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.