கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது.
உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையர்கள் செல்வசுரபி, சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் கதிர்வேல் (வடக்கு), இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), நிலைக்குழு தலைவர்கள் தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), சாந்திமுருகன் (பணிகள்), முபசீரா (வரிவிதிப்பு&நிதி), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.