fbpx
Homeபிற செய்திகள்சுற்றுசுவர் கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்த கோவை மேயர்

சுற்றுசுவர் கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் பிரபு நகரில் உள்ள மாநகராட்சி குப்பைகிடங்கு பகுதியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டர் நீளம், 8 அடி உயரத்திற்கு கட்டப்படவுள்ள சுற்றுசுவர் கட்டுமானப்பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் எழில், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img