fbpx
Homeபிற செய்திகள்சென்னை, கோவை, தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

சென்னை, கோவை, தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்து மஸ் தாத்தா வேடமிட்டு பரிசுகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு தேவாலயங்கள் முழுவதும் மின் விளக் குக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற் றது. தூத்துக்குடி மாவட்ட பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நேற்று இரவு கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. கேரல் ஊர்வலத்தின் போது, இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமி கள் என அனைவருமே ஆடி பாடி கொண்டாடினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பெசன்ட் நகரில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குக ளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளித்தது.

கோவையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, ரத்தனபுரி சின்னப்பர் தேவாலயத்தில் மும்மதத்தைச் சார்ந்தவர்கள் கேக் வெட்டி, மாறிமாறி இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

கிறிஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டு மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் ஆலயத்திற்குள் நடைபெறும் திருப்பலி ஆராதனை நிகழ்வை அனைவரும் காண்பதற்கு எல்.இ.டி திரை வசதியும் செய்யப்பட்டிருந்தது.

12 மணி அளவில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் இயேசு கிறிஸ்துவின் உருவபொம்மையை காண்பித்து இயேசு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து குடிலில் இயேசு கிறிஸ்து வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img