ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு கோடைகாலங்களில் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனி டையே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் மக்கள் குளு குளு பிரதேசங்களான ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளுக்கு தேடி செல்கின்றனர். இது அந்த மலைப்பிரதேசங்களில் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற் படுத்துவதாக கூறி அதனை கட்டுப்படுத்த கொரோனா காலத்தைப் போல இ பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
அதன்படி கடந்த 7 ம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இபாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது.
கோவையில் இருந்து நீல கிரி செல்லக்கூடிய ஊட்டி சாலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு தூரி பாலம் சோதனை சாவடி கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி சோதனை சாவடி என இரு இடங்களில் இபாஸ் சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ-பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இ பாஸ் பெறாத வாகனங்களை நிறுத்தி இபாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லி வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதி காரிகளின் வழிகாட்டுதல்படி இ பாஸ் எடுத்து பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மேட்டுப்பாளையம் கல்லாறு தூரி பாலம் அருகே செயல்பட்டு வரும் சோதனைச் சாவடியில் நேரில் ஆய்வு மேற் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய தலைமை செயலாளர் கூறியதாவது:
இ பாஸ் நடைமுறை மிகவும் எளிமையாகவும் எளிதாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி எளிதாக இபாஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் வேண்டி பதிவு செய்த உடனே பயணிகளுக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இ.பாஸ் தொடக்க நாளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதியில் உள்ள வணிகர்கள் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று அச்சமடைந்தனர்.
ஆனால் இ பாஸ் சுற்றுலா பயணிகளுக்கு எளிதாகவும் உடனடியாகவும் இ பாஸ் கிடைப்பதால் தற்போது வணிகரீதியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறினார்.
இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,கூடுதல் ஆட்சியர் கௌசிக், வடக்கு வருவாய் கோட்டச்சியர் கோவிந்தன், வட்டாச்சியர் சந் திரன், நகராட்சி ஆணையாளர் அமுதா, உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.