பல்வேறு வளாகங்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணி, பல்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான அம்ருதா விஸ்வ வித்யாபீடம் (அம்ருதா பல்கலைக்கழகம்), இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்த தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) 2025-இல் நாட்டின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் இடம்பெற்றுள்ளது.
அம்ருதா அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களில் 8-வது இடத்தையும், மருத்துவக் கல்லூரிகளில் 9-வது இடத்தையும் பெற்று, இரு பிரிவுகளிலும் நாட்டின் முதல் பத்தாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எட்டாவது முறையாக முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெறும் அரிய சாதனையை அம்ருதா நிகழ்த்தியுள்ளது. 2003-இல் நிறுவப்பட்ட அம்ருதா விஸ்வ வித்யாபீடம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 வளாகங்களுடன், இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளைய நிறுவனமாகத் திகழ்கிறது.
இந்த ஆண்டின் வலுவான தரவரிசைக்கு பங்களித்த முக்கிய காரணிகளில் ஒன்று அம்ருதா வின் விரிவான உலகளாவிய கூட்டாண்மையே ஆகும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், கிங்ஸ் கல்லூரி லண்டன் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழகம் உட்பட உலகின் 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாண்மைகளை இந்த பல்கலைக்கழகம் ஏற்ப டுத்தியுள்ளது. இந்த கூட்டணிகள் முன்னணி ஆராய்ச்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்களை உள்ளடக்கியுள்ளன, இது ஒரு உலகளாவிய நிறுவனமாக அம்ருதாவின் பங்கை வலுப்படுத்துகிறது.
பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவப் பிரிவுகளைக் கடந்து, பல்வேறு துறைகளில் அம்ருதாவின் சிறப்பு பிரதிபலிக்கப்படுகிறது:
- ஒட்டு மொத்த ரேங்கிங் : 17.
- ஆராய்ச்சி: 31,
- பொறியியல்: 23,
- மேலாண்மை: 26,
- மருந்தியல்: 14,
- பல் மருத்துவம்: 14.
இந்த சாதனை குறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.வெங் கட்ரங்கன் கூறுகையில்: “இந்தியாவின் முதல் 10 பல் கலைக்கழகங்களிலும், முதல் 10 மருத்துவக் கல்லூரிகளிலும் தொடர்ந்து தரமான கல்வி மற் றும் கருணையின் அடிப்படையிலான இயக்கிய ஆராய்ச்சியில் அம்ருதாவின் அசைக்கமுடியாத பங்களிப்பை பிரதிபலிக்கிறது. அம்ருதா பல்கலைகழகத்தின் வேந் தர் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உலகத்தரம் வாய்ந்த கல்வியை சமூக நலனுக்கான வலுவான உறுதிப்பாட்டுடன் சம நிலைப்படுத்தும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இந்த அங் கீகாரத்தை சாத்தியமாக்கும் அயராத பங்களிப்புகளுக்காக பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



