ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் இயங்கி வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர் சி.அகில் இடைநிலைப் பிரிவில் இரண்டாம் பரிசையும், கோவை பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி மாணவி த.சுரேகா கல்லூரிப் பிரிவில் மூன்றாம் பரிசையும் வென்று சாத னை படைத்துள்ளனர்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’, ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’, ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் மொத்தம் 4816 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு, மற்றும் கோவை ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் என 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
இதில் மாநில அளவில் வெற்றி பெற்றோரின் விவரம் பின்வருமாறு:
இடைநிலைப் பிரிவு:
• முதல் பரிசு: பெ. த. சங்கமேஸ்வரன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி (சேலம் மையம்).
• இரண்டாம் பரிசு: சி. அகில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம். (கோவை மையம்).
• மூன்றாம் பரிசு: பா. வர்ஷா, ஷெம்ஃபோர்ட் பள்ளி, சிதம்பரம் (புதுச்சேரி மையம்).
மேல்நிலைப் பிரிவு:
• முதல் பரிசு: ச.கௌ.பாவேஷ்பிரசன்னா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, பேரளம், நன்னிலம். (திருவாரூர் மையம்).
• இரண்டாம் பரிசு: செ.ஷிவானி, டி.ஏ.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் மேற்கு, சென்னை (தாம்பரம் மையம்).
• மூன்றாம் பரிசு: மொ.கா.காவ்யபிரியா, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் வித்யாசாலா பதின்ம மேல்நிலைப் பள்ளி, மேலூர் (மதுரை மையம்).
கல்லூரிப் பிரிவு:
• முதல் பரிசு: மு.மணிவாசகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை (மதுரை மையம்).
• இரண்டாம் பரிசு: அ.பாலபிரியதர்ஷினி, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் (புதுச்சேரி மையம்).
• மூன்றாம் பரிசு: த.சுரேகா பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி, பீளமேடு, கோவை (கோவை மையம்).
முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ.7,500 ரொக்க மும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கமும் மற்றும் அனை வருக்கும் கோப் பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.