கோவை அரசு சட்டக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (சென்னை) 3வது பட்டமளிப்பு விழா கோவை மருதமலையில் உள்ள சட்டக் கல்லூரியில் நடந்தது, இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர், நிர்மல் குமார், உச்சநீதிமன்ற நீதிபதியும் கோவை அரசு சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான வி.மோகனா ஆகியோர் மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினர்,
நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் டாக்டர் கௌரி ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாரதிதாசன், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




