fbpx
Homeபிற செய்திகள்கொளுத்தும் வெயில்: ஏசி புறநகர் ரயில் சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு

கொளுத்தும் வெயில்: ஏசி புறநகர் ரயில் சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு

சென்னை கடற்கரை – தாம் பரம் – செங்கல்பட்டு இடையே சென்னை கோட் டத்தால் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புறநகர் (AC EMU) ரயில் சேவைகளுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்த ஏசி ரயில்கள் வழங்கும் வசதி மற்றும் பய ணிகளுக்கு உகந்த சூழல் கார ணமாக, புறநகர் பயணிகள் மத்தியில் இதற்கான வரவேற்பு பெருமளவில் உயர்ந்துள்ளதை இது காட்டுகிறது. தற்சமயம், சென்னையின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான இந்த புறநகர் பாதையில் மொத்தம் 10 ஏசி ரயில் சேவைகள் இயக் கப்பட்டு வருகின்றன. இவை பயணிகளுக்கு ஒரு சொகு சான பயண அனுபவத்தை வழங்கு வதோடு, தடையற்ற தரைவழிப் போக்குவரத்து இணைப்பையும் உறுதி செய்கின்றன.

நடப்பு 2026-ஆம் ஆண் டின் ஜனவரி முதல் மே வரை யிலான காலகட்டத்தில், ஒட்டு மொத்தமாக 4,36,462 பயணிகள் இந்த ஏசி ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மாதவாரி யான பயணிகளின் எண்ணிக்கை முறையே ஜனவரியில் 69,454 ஆகவும், பிப்ரவரியில் 66,138 ஆக வும், மார்ச்சில் 89,176 ஆகவும், ஏப்ரலில் 87,431 ஆகவும் மற்றும் மே மாதத்தில் 1,24,263 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்தத் தரவுகள், குறிப்பாக கோடை காலத்தில் சென்னை மக்களிடையே ஏசி ரயில் சேவைகள் அடைந்துள்ள மிகுந்த வரவேற்பைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. இந்த ஏசி ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்தே, இதுவரை இல்லாத அளவாக கடந்த மே 2026-இல் தான் மிக உயர்ந்தபட்ச பதிவாக 1,24,263 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதன் மூலம், இச்சேவை வரலாற்றில் புதிய மைல்கல்லாக முதன்முறையாக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பயணிகளின் எண்ணிக்கையை மிக எளிதாகக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் மட்டும் 36,832 பயணிகள் கூடுதலாகப் பயணித்துள்ளனர் . இது கிட்டத்தட்ட 42 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளதைக் காட்டுவதுடன் , கடுமையான கோடை வெயிலின் போது ஏசி ரயில்களையே மக்கள் பெரிதும் விரும்பியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மே மாதத்தில் எட்டப்பட்ட இந்த சாதனை, ஏசி ரயில் சேவைகளின் தரம், நம்பகத்தன்மை, சரியான நேரப் பராமரிப்பு மற்றும் அதன் சொகுசுத் தன்மை மீது பயணிகள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வரும் வேளையில், தங்களின் தினசரிப் பயணத்தை எவ்வித மன உளைச்சலும் இன்றி, குளிர்ச்சியாகவும், வேகமாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் நிறைவு செய்யப் புறநகர் ரயில்வே வலைப்பின்னலை பயணிகள் பெருமளவில் நாடியுள்ளனர். இந்த சேவையானது அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் தினசரிப் பயணம் மேற்கொள்ளும் இதர பயணிகளுக்கு ஒரு சிறந்த பயணத் தேர்வாக உருவெடுத்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, நவீன மற்றும் பயணி யர்-மையப் புறநகர் ரயில் சேவை களை வழங்குவதில் சென்னை கோட்டத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பிற்குச் சான் றாகும். பொதுமக்களிடம் இருந்து கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு, பொதுப் போக் குவரத்துத் தரத்தை உயர்த் துவதிலும், சென்னை புறநகர் ரயில் சேவையில் ஒரு உன்னத மான அனுபவத்தை வழங்கு வதிலும் ஏசி ரயில்களின் முக்கி யப் பங்களிப்பை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது.

சென்னை கோட்டம், தொடர்ந்து தனது பயணி களுக்கான வசதிகளை மேம்படுத் தவும், பொதுமக்களின் ரயில் பயணத்தைப் பாதுகாப்பான தாகவும், வசதியானதாகவும் மாற்றும் புதிய திட்டங்களை விரி வுபடுத்தவும் என்றும் உறுதியுடன் செயல்படும்.

படிக்க வேண்டும்

spot_img