fbpx
Homeபிற செய்திகள்வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி 64வது விளையாட்டு விழா- வெற்றிபெற்ற மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி 64வது விளையாட்டு விழா- வெற்றிபெற்ற மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியில் 64வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சே.சிந்தனா வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் செயலாளர் கனகவேலுக்கு கல்லூரி தலைவர் பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.

அடுத்ததாக, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கனகவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கல்லூரிச் செயலாளர் மதன் ஒலிம்பிக் கொடியையும், இணை செயலாளர் இனிமை கல்லூரிக் கொடியையும் ஏற்றி வைத்துச் சிறப்பித்தனர். பின்பு கல்லூரியின் விளையாட்டு வீராங்கனைகளால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

சாம்பியன் பானுபிரியா கூற அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பு விருந்தினர் தொடங்கி வைத்தார்.

தனிநபர் பிரிவில் முதுநிலை இரண்டாம் ஆண்டு கணினிப்பயன்பாட்டில் துறை மாணவி நாகலட்சுமி தங்கப் பதக்கமும், பானுபிரியா இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி தங்கப்பதக்கமும், முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி ருத்ராதேவி வெள்ளிப் பதக்கமும் மற்றும் இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி காயத்திரி வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

இரண்டாமாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் 90 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து கோப்பையை வென்றனர்.

விளையாட்டுத் துறை இயக்குநர் ஜமிலா ஜோதிபாய் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் கனகவேல் சிறப்புரையாற்றினார்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு கனகவேல், நிர்மலா. பழனிச்சாமி, மதன், இனிமை, சந்திரசேகரன், சிந்தனா ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img